அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு காய்ச்சல் ,சளி போன்றவை இருந்ததால் கொரானா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர் தொடர் கண்காணிப்பிலும் இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவர் உயிரிழப்பிற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இவரின் மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்த நிலையில் தற்போது அந்த முதியவர் கொரோனா வைரசால் தான் இறந்தார் என்பது உறுதியாகியுள்ளது.
இதனால் கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…