#BREAKING: தெலுங்கானாவில் நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து.

தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என கூறியுள்ளது. அக்டோபர் 4ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் தெரிவித்து, ஆஃப்லைன் வகுப்புகளை நடத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அடுத்த வாரத்திற்குள் பள்ளிகள் திறப்பதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டு, நேரடி கற்பிக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. குருகுலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் விடுதிகளைத் திறக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

7 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

8 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

9 hours ago