#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.!

Published by
murugan

கேரள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள  ராஜமலை பகுதியில்  இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு  பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 70 முதல் 80 பேர் வரை  வசித்து வந்தனர் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த  நிலச்சரிவில் இன்னும் எத்தனை பேர் சேற்றுக்குள் சிக்கியுள்ளார்கள் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இருக்கும் பகுதியை  இணைக்கும் பாலம் நேற்று அடித்துச் செல்லப்பட்டதால், இப்பகுதியில்  மீட்பு குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளா நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காலை நிலச்சரிவு ஏற்பட்ட  இடத்திலிருந்து 5 பேர் சடலங்களாக  மீட்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

36 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago