புதுச்சேரியில் மழை, வெள்ளம் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ள காட்சியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விளை நிலங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மீனவர் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசிடம் உரிய நிதியை கோருவோம் என்றும் மழையால் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…