#BREAKING: கர்நாடகா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய எடியூரப்பா!! அடுத்த முதல்வர் யார்?

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்த எடியூரப்பா, அம்மாநில ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

கர்நாடகா மாநிலம் முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார். கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியிருந்தார் எடியூரப்பா.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று அம்மாநில ஆளுநர் தவார் சந்த்யை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வழங்கினார்.  பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா ராஜினாமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காய சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அடுத்து முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, சி.டி. ரவி உள்ளிட்டோரில் ஒருவர் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் பிஎஸ் சந்தோஷ் என்பவரின் பெயரும் முதல்வர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, தானே முன்வந்து முதல்வர் பதிவில் இருந்து விலகியுள்ளேன். டெல்லியில் இருந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று யாரும் நிர்பந்திக்கவில்லை. என் மீது மதிப்பு வைத்த கர்நாடக மக்களுக்கு சேவையாற்ற 2 ஆண்டுகள் வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago