Categories: இந்தியா

பரபரக்கும் தெலுங்கானா அரசியல் களம்.! நேரலையில் தாக்கி கொண்ட பிஆர்எஸ் – பாஜக வேட்பாளர்கள்.!

Published by
மணிகண்டன்

நவம்பர் மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் தென்னிந்திய மாநிலத்தில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலும் ஒன்று. இது பாஜகவுக்கு முக்கியமான தேர்தலும் கூட. கடைசியாக கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பின்னர், தென்னிந்தியாவில் முற்றிலும் சட்டப்பேரவை ஆட்சியை  இழந்த தேசிய கட்சியாக பாஜக மாறிவிட்டது.

அதனால், வரும் தெலுங்கானா தேர்தலில் முதன்முறையாக ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. அதே போல கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய தெம்புடன் , எதிர்க்கட்சியாக தெலுங்கானாவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கூடுதல் நம்பிக்கையுடன் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது.

மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.! கார்கே திட்டவட்டம்.!

தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்தது முதல் ஆட்சியை இருமுறை கைப்பற்றியுள்ள சந்திரசேகர ராவ்வின் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக வேலை செய்து வருகிறது.

இது தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் பரப்புரைகள், விவாத மேடைகள் என தெலுங்கானா அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் ஆளும் கட்சி எம்எல்ஏ மற்றும் பாஜக தேர்தல் வேட்பாளர்  பேசி கொண்டு இருக்கும் போது வாதங்கள் முற்றி அது கைகலப்பாக மாறிவிட்டது.

ஆளும் பிஆர்எஸ் கட்சியின் குத்புல்லாபூர் தொகுதி எம்எல்ஏவும், அத்தொகுதி வேட்பாளருமான கே.பி.விவேகானந்த கவுட் மற்றும் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் ஓர் தனியார் தொலைக்காட்சி விவாத மேடையில் கலந்துகொண்டனர்.

அப்போது கடுமையான வாதங்கள் இரு தரப்பில் இருக்கும் முன்வைக்கப்பட்டது. அப்போது வட மாநில டெலிவரி இளைஞரை தெலுங்கு பேசவில்லை என கூறி ஆளும் கட்சி ஆட்கள் தாக்கியதாக பாஜக வேட்பாளர் குற்றம் சாட்டியதாக தெரிகிறது.

இந்த வாக்குவாதத்தில் தான் பேச்சுவார்த்தையில் இருந்த விவாத நிகழ்ச்சி கைகலப்பாக மாறியது. இதனை சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். நேரடி விவாத மேடையில் நடைபெற்ற இந்த தக்குதல் சம்பவம் விறுவிறுவென தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரவி பரபரப்பாக பேசப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago