பெங்களூரு பைப்பனஹள்ளியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் இறந்தார்.
அந்த பெண் ஜிஎம் பால்யாவில் வசிக்கும் வினயா விட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மல்லேஸ்பிளையாவில் உள்ள சேலஞ்ச் ஹெல்த் கிளப்பில் பணிபுரிந்து வந்தார்.வழக்கமான தனது உடற்பயிற்சியினை செய்யும் பொழுது மாரடைப்பால் பெண் சரிந்து விழும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பப்ளிக் ஸ்பாட் என்ற யூடியூப் சேனலால் பகிரப்பட்ட சிசிடிவி காட்சிகள், ஸஃயூட் ரேக்(squat rack) அருகே பெண் சரிந்து விழுந்ததைக் காட்டுகிறது. ஜிம்மில் இருந்த ஊழியர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் வினயாவை உடனடியாக அருகில் உள்ள சிவி ராமன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், மருத்துவரின் பரிசோதனையின் அடிப்படையில், வினயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் பைப்பனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…