இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்புசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோவாக்சின், கோவிஷில்டு என இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அவசரகால தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. மேலும், வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு தேசிய நிபுணர் குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், தற்பொழுது வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்புசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்தவகையில், தடுப்பூசி செலுத்தும் முதல் 100 பேரை 7 நாட்களுக்கு கண்காணித்து, மருந்தின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…