கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளத்தில் 2 நாள்களில் தமிழ் மொழி சேர்ப்பு.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது.
இதனால் தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற கோவின் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது, ஆனால் அதன் இணைய பக்கத்தில் 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன, இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகத்தில் அரசியல் தலைவர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது, இதன்விளைவாக தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து மத்திய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் வலியுறுத்தியிருந்தார், இதையடுத்து மத்திய அரசு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.
அதில் கோவின் இணையதள வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இன்னும் 2 நாள்களில் தமிழ் மொழி கோவின் இணையதளத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…