சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த நாள் வரலாற்று முக்கியத்துவமான நாள். இந்த நாள் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நாளாகும். விண்வெளி திட்டத்தில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு. சந்திரயான் விண்ணில் ஏவப்பட்டது இந்திய விஞ்ஞானிகளின் திறமையை உலகத்திற்கு வெளிப்படுத்துகிறது.இவர்களின் இந்தச் சாதனை இளைஞர்களை அறிவியல் துறைக்கு வருவதை ஈர்க்கும். இந்த விண்கலம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது மிகப் பெரிய சிறப்பு என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…