நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டாலில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டி துண்டிக்கப்பட்டது
பின்னர், ஆர்பிட்டர் பகுதி நிலவை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்தது. மேலும், விரைவில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் உடன் மீண்டும் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஆர்பிட்டர் மூலம் லேண்டர் இருக்குமிடம் அறியப்பட்டது என தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இஸ்ரோ ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறுகையில், ‘விக்ரம்லேண்டர் முழுமையாக சேதமடையவில்லை..லேண்டர் முழுமையாக உள்ளது எனவும், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை பற்றிய தகவல் வெளியானது எனவும், விரைவில் இது குறித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விக்ரம் லேண்டரை கண்டறிந்து அதன் மூலம் சிக்னல் பெற, நிலவை அதன் தரைப்பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரை 50 கிமீஆக தொலைவில் சுற்ற வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…