ஏழு ஆண்டுகளுக்கு முன் அதாவது 2012 ஆம் ஆண்டு மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் அவர்களுக்கு சொந்தமான கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கிடைக்கப்பெற்றன.
அந்த சமயத்தில் வீட்டில் யானை தந்தங்களை பொதுமக்கள் வைத்திருக்கக்கூடாது. அதனை மீறி நடிகர் மோகன்லால் 4 தந்தங்களை வீட்டில் வைத்திருந்தார். பிறகு, அவர் அப்போது கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டு பின்னர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து யானைத் தந்தங்களை திரும்ப வாங்கினார்.
இந்த சம்பவத்தை எதிர்த்து ஏழூரை சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தற்போது ஏழு ஆண்டுகள் கழித்தும் இந்த வழக்கின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து கேரள கொடநாடு போலீஸார் மோகன்லால் உட்பட மேலும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…