சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோலுக்கு 1%, டீசலுக்கு 2% வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்தது. மேலும், மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களிலும் வாட் வரி குறைத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது சத்தீஸ்கர் மாநிலத்தில் டீசல் மீதான வாட் வரி 2 சதவீதமும், பெட்ரோல் மீதான வாட் வரி 1 சதவீதமும் குறைப்பதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் அரசுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…