பிரதமர் உட்பட 10,000 பேரை சீனா உளவு பார்த்த விவகாரம் – மாநிலங்களவையில் விவாதிக்க உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

சீன நிறுவனம் 10,000 பேரை உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த மாநிலங்களவையில் உத்தரவு.

இந்தியாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உட்பட கிட்டத்தட்ட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் ஷென்சென் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்கள் என ஆகியோரை அடையாளம் கண்டு கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் சீன கம்யூனிச கட்சிக்கும், சீன அரசுக்கும் அதிக அளவில் தொடர்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலை மாநிலங்களவை நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் பிரதமர் மோடி, உட்பட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு விவாதம் நடத்த உத்தரவிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

40 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago