இந்தியா

கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டதற்கு எதிராக டெல்லி காவல்நிலையத்தில் புகார்…!

Published by
லீனா

கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டதற்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் மீது டெல்லி காவல்நிலையத்தில், அவினிஷ் மிஷ்ரா என்ற நபர் புகார். 

கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 24 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.

பெங்களூரில் நடைபெற்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டதற்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் மீது, டெல்லியில் உள்ள பாரகாம்பா காவல் நிலையத்தில் அவினிஷ் மிஷ்ரா என்ற நபர் புகாரளித்துள்ளார். இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதாகவும், தேர்தலில் முறையற்ற வகையில் செல்வாக்கு மற்றும் ஆளுமைக்காக அந்தப் பெயரைப் பயன்படுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பாரகாம்பா காவல் நிலையத்தின் எஸ்ஹோ மஹாபீர் சிங் கூறுகையில், நாங்கள் புகாரை ஏற்றுக்கொண்டோம், இதில் சட்ட அம்சங்கள் உள்ளன. எங்கள் மூத்த அதிகாரியுடன் பேசுவோம். அதன்பிறகுதான் அதை மேலும் எப்படி தொடரலாம் என்று பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago