உ.பி எல்லையில் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கையில் குழப்பம் – அன்னை கங்கை அழுகிறாள் ராகுல் காந்தி ட்வீட்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மற்றும் உத்திர பிரதேச எல்லையில் உள்ள 1,140 கி.மீ நீளம் உள்ள கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் நீரில் மிதந்தபோது கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. மேலும் உத்திர பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க இடம் கிடைக்காத காரணத்தினால் இந்த கொடூர செயல் நடந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் தெறிவித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை ஒரு அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அதில் 1,140 கி.மீ நீளம் உள்ள கங்கை ஆற்றில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் 2000 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அதனுடன் நரேந்திர மோடியை மறைமுகமாக சாடியுள்ளார். அதில் “அன்னை கங்கா ஒருவரை அழைத்ததாகச் சொன்னவர், தாய் கங்கையை அவர் அழவைத்துள்ளதாகவும்” கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…