தற்போது நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியுரிமை சட்ட மசோதாவை இரு அவையிலும் நிறைவேற்றியது.
இதனால் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் பாஜகவிற்கு எதிராகவும் , குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் வட மாநிலங்களான டெல்லி , உத்தர பிரதேசம் ,மேற்குவங்காளம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறையாக மாறியது.
இதைத்தொடர்ந்து தற்போதும் சில இடங்களில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிய பாரதிய ஜனதா கட்சி ஒருபுறம் குடியுரிமை சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது குடியுரிமை சட்டத் பிரச்சனையில் காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியா வந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் தான், அவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழக்கியுள்ளது என கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…