போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்த பிரியங்கா காந்தி.!

Priyanka Gandhi

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார். 

டெல்லில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவராக பிரிஜ் புஷன் சரண்சிங் தான் பதவியில் இருக்கிறார். இவர் பாஜகவை சேர்ந்த உத்தர பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி , மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து தங்கள் ஆத்தாவை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட எம்பி சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi