உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் அரசு காப்பகத்திலுள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் கருவுற்றுள்ளதாக கூறப்படுகிறது .
உத்திரம் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு நடத்தி வரும் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகள் உட்பட பல பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 5 பேர் கருத்தரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.அந்த 5 பேரில் இருவர் சிறுமிகள் மற்றும் அதில் ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்கள் யாவரும் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 5 பெண்களும் காப்பகத்திற்கு வருவதற்கு முன்பே கருத்தரித்து இருந்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மதேவ் தெரிவித்துள்ளார்.
தற்போது கான்பூரில் ஸ்வரூப் நகரில் உள்ள அந்த காப்பகம் சீல் வைக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கருத்தரித்த 5 பெண்களில் 3 பேர் ராமா மருத்துவ கல்லூரியிலும், இருவர் ஹாலெட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…