கான்பூர் அரசு காப்பகத்திலுள்ள கருவுற்ற 5 பேர் உட்பட 57சிறுமிகளுக்கு கொரோனா.!

Published by
Ragi

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் அரசு காப்பகத்திலுள்ள 57 சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேர் கருவுற்றுள்ளதாக கூறப்படுகிறது .

 உத்திரம் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் அரசு நடத்தி வரும் காப்பகத்தில் ஆதரவற்ற சிறுமிகள் உட்பட பல பெண்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 5 பேர் கருத்தரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.அந்த 5 பேரில் இருவர் சிறுமிகள் மற்றும் அதில் ஒருவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . இவர்கள் யாவரும் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், 5 பெண்களும் காப்பகத்திற்கு வருவதற்கு முன்பே கருத்தரித்து இருந்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மதேவ் தெரிவித்துள்ளார்.

தற்போது கான்பூரில் ஸ்வரூப் நகரில் உள்ள அந்த காப்பகம் சீல் வைக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். கருத்தரித்த 5 பெண்களில் 3 பேர் ராமா மருத்துவ கல்லூரியிலும், இருவர் ஹாலெட் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 minutes ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago