திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! மணமகன் தந்தை உட்பட 4 பேர் பலி…!

Published by
லீனா

தெலுங்கானாவில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு  ஊரடங்கு நாட்களில் நடைபெறும், திருமண நிகழ்வு, துக்க நிகழ்வு போன்ற நிகழ்வுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட யாருமே, சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை.

இதனையடுத்து, விழா முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்ற பின், இது குறித்து சுகாதாரத்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் திருமணத்தில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.

இதனை தொடர்ந்து, மணமகனின் தந்தை உட்பட நான்கு பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். பயத்தின் காரணமாக இவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக கூட யாரும் முன்வராத நிலையில், கிராமத்து பஞ்சாயத்து கூடி இறுதிச்சடங்கு செய்துள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட 100 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

39 minutes ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

4 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

5 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

5 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

6 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

6 hours ago