கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா! 144 தடை உத்தரவு அமல்!

Published by
லீனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்,  8,135 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், 72,339 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மாநில தலைமைச் செயலாளர் மாநிலம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாநிலத் தலைமைச்செயலாளர் விஸ்வாஸ் மேத்தா பிறப்பித்த உத்தரவில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிகமாகக் கூடுவது, கூட்டமாகச் சேர்வது போன்றவை இன்னும் பரவலை வேகப்படுத்தும்.  எனவே, 5 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், சமூக விலகலைக் கடைபிடிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 3-ம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சூழலை ஆய்வு செய்து,  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 144 தடை உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள திருமணங்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் தேவைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 minutes ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

41 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago