கொரோனா நோயாளி மரணம்..ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் மீது தீ வைத்த சம்பவம்.!

Published by
கெளதம்

கொரோனா நோயாளியின் மரணம் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் வரை தடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஒரு கொரோனாநோயாளியின் மரணம் குறித்து ஆத்திரமடைந்த குடும்பத்தின் உறவினர்கள் கடந்த புதன்கிழமை இரவு கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பெலகாவி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தீ வைத்தனர்.

அன்று உயிரிழந்த 55 வயதான நபரின் உறவினர்கள் கல்லை எறிந்து மருத்துவமனையை சேதப்படுத்தினர். முதற்கட்ட விசாரணையின்படி, உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்று ஏபிஎம்சி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருத்துவமனைக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் தீயை அணைக்கும் வரை தடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு கான்ஸ்டபிளும் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெலகாவி டாக்டர் தியாகராஜன் கூறுகையில் , “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நோயாளியின் உறவினர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தக்கூடாது. இந்த காலங்களில் எங்கள் மருத்துவ ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நாங்கள் புகார் பதிவு செய்துள்ளோம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் 108 ஆம்புலன்சில் குற்றவாளிகள் வாகனத்திற்கு தீ வைத்தபோது யாரும் இல்லை. தாக்குதல் நடத்திய கும்பலில் 30 முதல் 40 பேர் இருந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நாங்கள் மருத்துவமனையைச் சுற்றி அதிகமான பொலிஸ் படையை குவித்தோம் என்று அவர் கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

13 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

30 minutes ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

1 hour ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago