கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,347 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,79,922 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மேலும், இன்று ஒரே நாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 57,879 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், மாநிலத்தின் கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நாளை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…