இந்தியாவில் 10 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு , இறப்பு எண்ணிக்கை 25,000 ஆக உயர்வு

Published by
Castro Murugan

இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10 லட்சத்தை கடந்துள்ளது .

உலக அளவில், இதுவரை 13,826,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  589,481 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் நாளுக்குநாள் வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது .இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த நோயின் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில்,  1,002,851 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25,543 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 613,735 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள  நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ்  32,682 பாதிக்கப்பட்டுள்ளனர்  இதில்  614 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட் -19 பாதிக்கப்பட்டதில் பதிவான மூன்றாவது நாடாகவும், 25,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்த எட்டாவது நாடாகவும் இந்தியா உள்ளது.

மாநிலங்களின் நிலவரம் :

மகாராஷ்டிராவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது, இது புனேவில் தினமும் 8000 க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பதிவு செய்து வருகிறது. தமிழ்நாடு தினசரி சுமார் 4,500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி  வருகிறது, அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முறையே 3000 மற்றும் 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்திலும் தினசரி 1,600 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு  வருவதாகவும், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் தினமும் 1,500 என்ற எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது .

இதற்கு முன்னர் தொற்றுநோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்திய கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் கடந்த மாதம் ‘ஊரடங்கை தளர்த்துதல் ‘ கட்டம் தொடங்கியதிலிருந்து எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

ஒரு நாளைக்கு 10 லட்சம் :

எவ்வாறாயினும், கோவிட் -19 இன் மொத்த பாதிக்கப்பட்டவர்களில்  மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தீவிர மருத்துவ மேற்பார்வையில் இருப்பதாகவும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் ஏற்கனவே குணமடைந்து சென்றுவிட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி மாதம் முதன்முதலில் பதிவாகியதிலிருந்து இந்தியா சோதனை திறன்களை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நாங்கள் ” ஒவ்வொரு நாளும் 3.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்து வருகிறோம்,”  வரும் 12 வாரங்களில் ஒரு நாளைக்கு 10 லட்சம் மாதிரிகளை சோதிக்க திட்டமிடப்பட்டுள்தாகவும் தெரிவித்தார் .

Published by
Castro Murugan
Tags: coronavirus

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

4 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

4 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

5 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

6 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

6 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

6 hours ago