நடு கடலில் ஏற்பட்ட தீவிபத்து.! ஹெலிகாப்டரில் பறந்த இந்திய கடலோர காவல்படை.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவுக்கு 20 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி நியூடைமண்ட் என்ற கப்பல் இலங்கை கடற்பகுதி அருகே திடீரென தீப்பிடித்தது.

குவைத் நாட்டிலிருந்து இந்திய நாட்டின் ஒடிசாவில் உள்ள பிரதீப் துறைமுகத்துக்கு, எம்டி – நியூடைமண்ட் என்ற கப்பல், கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. இது பிரதீப் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டதாகும். நேற்று இந்த நியூடைமண்ட் கப்பல், இலங்கை கடற்பகுதியில் வந்தபோது, இன்ஜின் அருகே திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீ, வேகமாக கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. பின்னர் தகவலறிந்து வந்த இலங்கை கடற்படை கப்பல்கள், சம்பவ இடத்துக்குச் சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

மேலும், முடிந்தவரை தீயை அணைக்க முயற்சித்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த சவுர்யா, சாரங், சமுத்ரா ஆகிய கடலோர காவல் படை கப்பல்களும், ஒரு ஹெலிகாப்டரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த கப்பலில் 20 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்துள்ளது.

இதுகுறித்து இந்திய இந்தியக் கடலோரக் காவல்படை தங்கள் ட்விட்டர் பதிவில், 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்ததாகவும், டேங்கர்களின் பின்புறத்தில் 2 மீட்டர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இலங்கைக் கடற்படை மீட்புக்காக 2 கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. நல்ல வேளையாக கப்பலின் சரக்குப் பகுதிக்கு தீ பரவவில்லை. இலங்கையிலிருந்து 65 கிமீ தொலைவில் நியூடைமண்ட் கப்பல் தீப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 minutes ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

2 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago