கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 பேருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 பேருக்கும் நீதிமன்ற காவலலை நீடித்து கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 பேருக்கும் அக்டோபர் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து கொச்சி சிறப்பு தேசிய விசாரணை முகமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரே‌ஷ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ன்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், இன்று ஸ்வப்னா சுரேஷ் உட்பட 12 குற்றவாளிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கொச்சி சிறப்பு தேசிய விசாரணை முகமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வாதத்தின்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ட்ரீம் சுரேஷ் உடல் ஊனமுற்று அவதிப்பட்டு வருவதால் ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தனர். ஜாமீன் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்ததோடு, சப்னாவை அவரது உறவினர்களைப் பார்க்க அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், என்ஐஏ காவலில் உள்ள நான்கு சந்தேக நபர்களும் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில், சந்தீப் நாயர், முகமது அன்வர், ஷமிம், முகமது அலி ஆகியோர் ரிமாண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே, கேரள உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில், அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

5 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

6 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

7 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

8 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

8 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

11 hours ago