கர்நாடகத்தில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு ..!

Published by
Sharmi

கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் மாநிலங்கள் தோறும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து கர்நாடகத்தில் ஜூன் 14 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 10 ஆம் தேதி அறிவித்த ஊரடங்கை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்தது. இந்நிலையில்,  ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் எடியூரப்பா மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இந்த கூட்டத்தில் ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டிப்பதாக முடிவெடுத்துள்ளனர். இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ சேவைகளுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் தற்போது 26,35,122 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

26 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

1 hour ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

4 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

4 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

5 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

5 hours ago