AmitShah [Image source : ANI]
பிபர்ஜாய் புயலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என அமித்ஷா பேட்டி.
அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசிய நிலையில், குஜராத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிபர்ஜாய் புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். குஜராத் முதலமைச்சருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா புயலால் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பிபர்ஜாய் புயலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த புயலில் 47 பேர் காயமடைந்தனர். 234 விலங்குகள் உயிரிழந்துள்ளன. புயலின் போது உயிர்களைப் பாதுகாக்க குஜராத் அரசு மத்திய அமைப்புகள் பணியாற்றிய விதம் சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…