மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மகாராஷ்டிராவில் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பிப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட இந்த நபர் பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள யஷ்வந்த்ராவ் சவுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 52 வயதான இவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல்முறையாகும். நோயாளிக்கு கடந்த 13 ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் பல மாநிலங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லியில் தான் அதிகமாக ஓமைக்ரான் பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஓமைக்ரான் பரவலுக்கு மத்தியில் மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதே நேரத்தில், நேற்று முதல் முதல் மும்பையில் 144 தடையை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…