பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரிப்பு.
பீகார் மாநிலத்தில் கன மழையின் போது மின்னல் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு , மூன்று நாள்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பீகார் மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 83 பேர் மின்னல் தாக்கி இறந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் பலர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15 கால்நடைகளும் இறந்துள்ளன. இதை தொடர்ந்து இன்று 9பேர் இறந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 92 ஆக அதிகரித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிகபட்சமாக 13 பேர் கோபால் கஞ்ச் பகுதியில் உயிரிழந்துள்ளார்கள், மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…