காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக டெல்லி அரசு, வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தளவில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகளவில் காணப்படுகிறது. இது, டெல்லியில் ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்சினையாகும். இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசு காரணமாக நடப்பாண்டு மட்டும் 24,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடத்திய ஒரு ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது.
டெல்லியில் காற்று மாசை குறைக்கும் நடவடிக்கையாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் “யுத் பிரதுஷன் கே விருத்” என்ற காற்று மாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரம் மூலம் டில்லி நகரில் காற்று மாசுக்கு எதிராக சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, அம்மாநிலத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் அனைத்து வகையான டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்தது. மேலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற நேரங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் தடைசெய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…