Categories: இந்தியா

ராஜஸ்தானில் 24,000 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டங்கள்… பிரதமர் மோடி தொடங்கிவைப்பு.!

Published by
Muthu Kumar

பிரதமர் மோடி, இன்று ராஜஸ்தானில் 24,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.

ராஜஸ்தானின் பிகானேரில் புதிதாக உருவாக்கப்பட்ட 500 கிலோமீட்டர் அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச் சாலை உட்பட ராஜஸ்தானில் 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, எல்லைப் பகுதியிலுள்ள கிராமங்கள் பல தசாப்தங்களாக வளர்ச்சியடையாமல் இருந்தன.

அவற்றின் வளர்ச்சிக்காக கிராம மேம்பாட்டுத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். எல்லை கிராமங்களை நாட்டின் முதல் கிராமங்களாக அறிவித்தோம், இக்கிராமங்களை பார்வையிட, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது கிராமங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கிறது. மாநிலத்திற்கு புதிய முன்னேற்றங்களை வழங்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

அமிர்தசரஸ்-ஜாம்நகர் 500 கிமீ விரைவுச் சாலையின் பிரிவைத் தொடங்குவதில் நான் அதிர்ஷ்டசாலி என்று கூறிய பிரதமர் மோடி, இந்த வழித்தடமானது ராஜஸ்தானை அரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கும் என்று குறிப்பிட்டார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago