மும்பை:தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனா அறிகுறி இல்லை என மத்திய அரசு அறிவிப்பு.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி,டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனாவை விட 10 மடங்கு வேகமாகப் பரவும் XE வகை கொரோனா பிரிட்டன் உட்பட சில நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில்,இந்தியாவில் மும்பையிலும் ஒருவருக்கு இருப்பதாக மும்பை மாகராட்சி கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில்,மும்பையில் புதிய வகை XE என்ற கொரோனா கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.சந்தேகத்திற்குரியவரின் மாதிரியை ஆய்வு செய்ததில் அது XE வகை கொரோனாவுடன் ஒத்துப்போகவில்லை எனவும்,XE இருப்பதாக கூறப்பட்ட 50 வயது பெண் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்.10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு XE வகை கொரோனாவின் அறிகுறிகளோ,இணை நோய்களோ இல்லை எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…