தமிழ்நாட்டை போலவே மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற சித்த ராமையா அம்மாநில சட்டமன்றத்தில் கோரிக்கை.
கர்நாடக மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டுவந்த எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, சிஏஏ, வேளாண் சட்டங்கள் மற்றும் தேசிய கல்விக்கொள்கை ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும் எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட 13 கோரிக்கைகளை பேரவையில் வலியுறுத்தினார்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மேற்கோள்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் சித்த ராமையா, தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர கலால் வரியை குறைக்கும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மாநில அரசு செஸ் மற்றும் இதர விற்பனை வரியை குறைக்கலாம். இதுபோன்று அண்டை மாநிலமான தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பெட்ரோல் மீதான வரியை ரூ.3 குறைத்துள்ளார்.
அதைபோல் கர்நாடக மாநிலத்திலும் நீங்கள் குறைக்க வேண்டும். தமிழகத்தை ஒப்பிடும்போது இங்கு அதிகமாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார். சட்ட பேரவையில் சித்த ராமையா கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பதிலளித்து பேசவுள்ளார் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…