இன்று இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள் அங்கு இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினார்கள்.இதில் மருத்துவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை இளநிலை மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் தத்தா சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில்,இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று ( 17 ஆம் தேதி) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும்.இந்த வேலை நிறுத்தத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் அனைவரும் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தது.
அதன்படி இன்று காலை முதல் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…