உள்நாட்டு விமானம் – ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை கட்டணம் நிர்ணயம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு விமான சேவைக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 

இதையயடுத்து, விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், விமான நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக பயணிகள் வர வேண்டும் என்றும் பயண நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் டெல்லியில் இருந்து மும்பை செல்ல சராசரி கட்டணம் கிட்டத்தட்ட ரூ.6,700 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஆகஸ்ட் 24 வரை உள்நாட்டு விமான கட்டணங்களை வசூலிக்க அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விமான கட்டணங்கள் மிகவும் அதிகரிக்க கூடாது என்பதால் அரசு கட்டணம் நிர்ணயம் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

5 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago