election commission order that Ban on ads [file image]
Election2024: ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என அடுத்தடுத்து மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தேர்தலுக்கான பணியில் தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
அதேசமயம் மக்களவை தேர்தலையொட்டி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மக்களவை தேர்தலையொட்டி செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அதாவது, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அன்றும், முன்தினமும் விளம்பரம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனதை புண்படுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் வகையிலான விளம்பரங்கள் கடந்த காலங்களில் வெளியிடப்பட்டதால், இந்த தடை விதிக்கப்படுகிறது. தேர்தலின் கடைசிக் கட்டத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் முழுத் தேர்தல் செயல்முறையையும் கெடுக்கும். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், எந்தவிதமான எரிச்சலூட்டும், வெறுக்கத்தக்க விளம்பரங்கள் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் தடை விதிக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…