கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியா பாஜக முன்னாள் அமைச்சர்..!

Published by
லீனா

சிவமோகா நகரில் நடைபெற்ற நிகழ்வில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்துள்ளார்.

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வருகிறது. அந்த வகையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய ஈஸ்வரப்பா 

இந்த நிலையில், கர்நாடகா, சிவமோகா நகரில் நடைபெற்ற நிகழ்வில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்துள்ளார்.  கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago