ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.5,000-க்கு விற்பனை செய்துள்ளார்.
ரமேஷின் தந்தை ரவீந்திர பாரிக், இளைய பேத்தியை காணவில்லை என்பதால் ரமேஷிடம் விசாரித்துள்ளார். ரமேஷ் கூற மறுக்க, அதில் சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் 2 வயது சிறு குழந்தையை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலாததால், மீண்டும் ரமேஷிடம் குழந்தை காணாமல் போனதுக்கு அவரை குற்றம் சாட்டியிருக்கிறார்.
பின்னர், பணத்திற்காக குழந்தையை கொடுத்ததாக ரமேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். அதனை அடுத்து, பாரிக் பிஞ்சராப்பூர் போலீசில் ரமேஷ் மீது மனித கடத்தல் காரணமாக புகார் அளித்துள்ளார். பின்னர், காவல் துறையினர் ரூ.5,000 கொடுத்து வாங்கிய மிது ஜெனாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை பத்திரமாக மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…