உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் தனது திருமண நாளன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களுடைய திருமண நாள் அன்று பலர் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானங்களில் திருமணம் நடத்துவது, கடலுக்கு நடுவில் திருமணம் நடத்துவது என பல முறைகளில் தங்கள் திருமணத்தை விசேஷப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதுபோல உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பெண்மணி ஒருவர் திருமண நாளன்று துப்பாக்கி சத்தத்தை ஒலிக்க செய்து கொண்டாடியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெத்வாரா பகுதியை சேர்ந்த பெண்மணி ரூபா பாண்டே அவரது மாமாவான ராம்வாஸ் பாண்டே என்பவரின் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து தனது திருமண நாள் அன்று துப்பாக்கி சத்தத்தை ஒலிக்கச் செய்து திருமண நாளை கொண்டாடியுள்ளார். மேலும் அவர் துப்பாக்கியை வைத்து காற்றில் சுட்டதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து இது தொடர்பாக அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…