Categories: இந்தியா

மணிப்பூர் முதல்வரின் கான்வாய் மீது துப்பாக்கி சூடு! அடுத்து நடந்தது என்ன?

Published by
அகில் R

மணிப்பூர்: இன்று காலை மணிப்பூரின் கங்போபி மாவட்டத்தை அடுத்து கோட்லென் கிராமத்தின் அருகே மணிப்பூர் முதல்வரான பைரன் சிங்கின் கான்வாய் மீது பயங்கரவாதிகள் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இன்னும் நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் போராட்டக்காரர்கள்  நடத்தி இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு உடலில் குண்டு பாய்ந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. பாதுகாப்பு வாகனங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜிரிபம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லியிலிருந்து, இம்பால் செல்லும் முதல்வர் பைரன் சிங், ஜிரிபம் மாவட்டத்தை ஆய்வு செய்ய செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அப்போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று (ஜூன். 8) இதே போல மற்றொரு சம்பவமாக 2 காவல் சோதனைச் சாவடிகள், வனத்துறை அலுவலகம் மற்றும் 70 வீடுகளைப் போராட்டக்காரர்கள் எரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
அகில் R

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

24 seconds ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

24 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago