மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குறைந்து வரக்கூடிய பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒவ்வொன்றாக கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இருப்பினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கபிபடாமலேயே இருந்தது.
மேற்கு வங்கத்திலும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இதனை அடுத்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை, சனிடைசர் வழங்குதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேற்கு வங்க மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…