ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட்,அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர் சேவையை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன.
பிரபல ஆன்லைன் சாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதானி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.அதாவது,ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரத்தை வலுப்படுத்தவும்,வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை செய்யவும் அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்தது.
ஆகவே,மும்பை மற்றும் சென்னையில் அதானியின் லாஜிஸ்டிக் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் புதிய விற்பனை மையங்கள் அமைக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது உள்ளது.இதனால் நேரடியாக 2500பேருக்கும்,மறைமுகமாக 1000பேருக்கும் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைப்பற்றி கூறுகையில்,”இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு வணிகங்கள் ஒன்றிணைந்து நமது நாட்டிற்கு தேவையான மிக முக்கியமான மற்றும் அதிநவீன உள்கட்டமைப்பை உருவாக்க உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…