என்னை மன்னித்து விடுங்கள் – 500 முறை ஊரடங்கு மீறியவர்களை எழுத சொல்லி தண்டனை வழங்கிய போலீஸ்!

Published by
Rebekal

உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டும் விட்டுவிடுமா என்ன? இந்தியாவிலும் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 273 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனாலும் சிலர் அரசாங்க உத்தரவை மீறி வெளியே செல்லும் பொழுது, காவல்துறையினர் சில கடுமையான தண்டனைகளும் கொடுத்து வந்தனர். அதேசமயம் சில இடங்களில் வித்தியாசமான முறையில் நூதன தண்டனைகளும், விழிப்புணர்வுகளும் வழங்கி வந்தனர்.

இந்நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளி ஊரிலிருந்து வந்து ரிஷிகேஷ் என்னும் நகரில் தங்கியிருக்கும் சில வெளிநாட்டினர் கங்கை நதிக்கரையோரம் நேற்று சுற்றி திரிந்தனர். அந்நேரம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வெளிநாட்டினர் என்பது தெரியவந்து உள்ளது.

எனவே இந்த பத்து பேரையும் “நான் ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற வில்லை என்னை மன்னித்து விடுங்கள்” என 500 முறை தனித்தனியாக எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர். தாங்கள் செய்த தவறை உணர்ந்து எழுதிய வெளிநாட்டினருக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

7 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago