Categories: இந்தியா

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

Published by
அகில் R

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

மண் தரையில் விளையாடப்படும் ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள டென்னிஸ் கிளப் டி ஜெனீவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 18 தொடங்கி மே 25 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கடந்த ஞாற்றுகிழமை அன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் முதல் நிலை ஒற்றையர் டென்னிஸ் ஆட்டக்காரர் சுமித் நாகல் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸுடன் எதிர்த்து மோதினார்.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் சுமித் நாகலின் கை முதலில் ஓங்கினாலும் நடந்து முடிந்த அந்த முதல் செட்டில் 6-7 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியின் 2-வது செட்டில் சுமித்தை முன்னிலை பெற விடாமல் சிறப்பாக விளையாடி செபாஸ்டியன் 3-6 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி 6-7 , 3-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் முதல் நிலை டென்னிஸ் வீரரான சுமித் நாகலை தோற்கடித்தார்.

இந்த தோல்வியால் முதல் சுற்றிலேயே அதாவது நாக் அவுட் முறையில் இந்த ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்தும் வெளியேறி உள்ளார். தோல்வியடைந்த சுமித் தனது X தளத்தில், “இன்றைய தோல்வியால் நான் சிறுது துவண்டு போயிருக்கிறேன். ஆனால் ரோலண்ட் கரோஸுக்கு (பிரெஞ்சு ஓபன் -French Open) தொடருக்கு என்னை நான் தாயாரிக்கி கொண்டு வருவேன். அடுத்தது பாரிஸ் தான்”, என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும், அவரது பதிவுக்கு அவரது ரசிகர்களும் அவருக்கு தோல்விக்கு ஆறுதல் கூறியதுடன் நடைபெற இருக்கும் பிரெஞ்சு ஓபன் தொடருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

6 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

7 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

7 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

7 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

8 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

15 hours ago