ஓமிக்ரான் வைரஸால் வரப்போகும் மோசமான நிலைக்கு தயாராகுங்கள் என ஹரியானா முதல்வர் அம்மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கமே தற்பொழுது வரை குறையாத நிலையில் இந்த கொரோனா வைரஸ் புதியதாக உருமாறி பல நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. இந்த வகை வைரஸுக்கு ஓமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸிலிருந்து இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் இது குறித்து கூறுகையில், ஓமிக்ரான் வைரஸ் பரவல் நிலைமையை கண்காணிக்க வேண்டும் என மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் வரப்போகும் மோசமான நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வைரஸ் வழக்குகள் இதுவரை ஹரியானா மாநிலத்தில் இல்லை. ஆனால் மாநிலத்தின் 140 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே மாநிலத்தின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…