காதலன் தன்னை கைவிட்டதால் அவரின் திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற காதலி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • காதலியின் காதலன் மற்றோரு பெண்ணுடன் திருமணம் நிச்சியிக்கப்பட்டதால் காதலி ஆத்திரம்.
  • காதலனின் திருமணத்தை நிறுத்துவதற்காக, அவரது அக்காவின் 2 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சண்டிகர் தலைநகரத்தின்பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மன்பிரீத் கவுர், மற்றும் அசோக் என்ற வாலிபரும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தனர். இந்நிலையில், அசோக்குக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால், அவர் கவுரை விட்டு விலகினார். நான் திருமணம் செய்ய ஆசைப்பட்ட காதலன், தன்னை உதறி தள்ளியதால் கவுர் ஆத்திரம் அடைந்து. பின்னர் அவரது திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிடமிருந்தார்.

இந்நிலையில், அசோக்கின் திருமணத்துக்காக அவருடைய அக்கா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, அக்காவின் குழந்தையான 2 வயது ஆதிராஜ். அவருடைய சகோதரன் மற்றும் மேலும் ஒரு சிறுமியும் கவுரின் வீட்டில் விளையாட சென்றனர். சகோதரனும், சிறுமியும் வீடு திரும்பிய நிலையில், ஆதிராஜ் திரும்பி வரவில்லை. இதனால், குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கவுரின் வீட்டிற்குள் விளையாட சென்ற மூவரில் ஆதிராஜ் மட்டும் திரும்பவில்லை என்பது தெரிந்தது.

பின்னர், கவுரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலன் தன்னை கைவிட்டதால் அவருடைய திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, வாஷிங் மெஷினிலிருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கவுரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடுமையான சம்பவத்தில் அப்பகுதி முழுக்க மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

4 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago