மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ இந்திய நாடு கிருஷ்ணர் பூமி. ஆதலால் நாட்டு பசுமாடுகளை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். இனியும் மதிப்போம். குழந்தை தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பாலை தான் குடிக்கிறார்கள். ஆதலால் பசுவதையை நாங்கள் எதிர்க்கிறோம்.
நாட்டு பசும் பாலில் தங்கம் கலந்து இருக்கிறது. அதனால் தான் நாட்டு பசும்பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டு பசுவின் காம்பில் சூரியவெளிச்சம் படும்போது அது தங்கமாக மாறுகிறது.’ என சர்ச்சைக்கு உரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் தனது இரு நாட்டு பசுமாடுகளை அழைத்து அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் மணப்புரம் தங்க நகை கடன் வழங்கும் ஸ்தாபனத்திற்கு சென்று மேற்கு வங்க பாஜக தலைவர் கூறியதை நினைவூட்டி தங்க நகை கடன் கேட்டுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. நகை கடன் ஸ்தாபன அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…