அரசு சரியாக செயல்படவில்லை – என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

Published by
Venu

காங்கிரஸ் கட்சியால் தங்களது எம்எல்ஏக்களை காப்பாற்ற முடியவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.சட்டப்பேரவையில்  முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் கூறினார்.

இதன் பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும்  தீர்மானம் இன்று படுதோல்வி அடைந்தது. நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஆட்சி செய்த காலங்களில் தனது சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கூறாமல்,மத்திய அரசை பற்றி குறை கூறி தன்னுடைய தீர்மானத்தின் மீது கொண்டு வந்த வாதத்தில் பேசியுள்ளார்.எங்களுடைய கேள்வி புதுச்சேரி மாநில மக்களுக்காக நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை ? எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது ? எத்தனை திட்டங்கள் புதிதாக இந்த அரசால் கொண்டு வரப்பட்டது.இந்த கேள்விகள் எல்லாம் எப்போதும் இருந்து வந்தது.அவர்கள் கொண்டு வந்த,கொடுத்த வாக்குறுதிகளை எதையுமே சரியாக செய்யவில்லை என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு.

இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்ற காரணங்களினால் ,அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ,அவர்களுடைய அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.இதனால் தான் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.எதிர்க்கட்சியாக நாங்கள் , ஆளுகின்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட பிறகு ,நம்பிக்கை கோருகின்ற தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்கின்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தினோம்.எங்கள் கடமை அது.ஆகவே நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது,அது தோல்வி அடைந்தது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago