காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்த நடைமுறை அக்டோபர் -31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இணையதள சேவை ,செல்போன் சேவை,லேண்ட் லைன் சேவைகள் முடக்கப்பட்டது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் நிலைமை மாறி வருகிறது.இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் .ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளிலும் வரும் நாட்களில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் .ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.குப்வாரா, ஹண்ட்வாரா மாவட்டங்களில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தகவல்தொடர்பு கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…