காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இந்த நடைமுறை அக்டோபர் -31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இணையதள சேவை ,செல்போன் சேவை,லேண்ட் லைன் சேவைகள் முடக்கப்பட்டது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் நிலைமை மாறி வருகிறது.இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் .ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளிலும் வரும் நாட்களில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் .ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.குப்வாரா, ஹண்ட்வாரா மாவட்டங்களில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தகவல்தொடர்பு கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…